பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: 2 தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை .
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது அங்கு இன்று காலையில் திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாய் மூக்கு ரத்தம் வாந்தி மயக்கத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிற்சாலையில் பரபரப்பு நிலவியது.உடனே தகவலறிந்த மீட்புப் வந்த படையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும், இது தொடர்பான சம்பவத்தின் காரணத்தை கண்டறிய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர் அரக்கோணத்தில் இருந்து சம்பவ இடத்துக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் தொழிற்சாலையில் ஆய்வு நடத்தப்பட்டு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments