பயிர்க்கடன் தள்ளுபடி: ₹5,932 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக மொத்தம் ₹5,932.23 கோடி அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சம்பந்தப்பட்ட தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ₹75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டம் மூலம் சிறு மற்றும் குறைந்த நிலப்பரப்பு கொண்ட விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments