இன்று ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடி வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்னை அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
தங்க கவசம், மலர் மாலைகள் மற்றும் வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் திரண்டனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தி பாடல்கள் ஒலித்தன.
கோவில் நிர்வாகம் சார்பில் வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆடி மாதம் முழுவதும் இதுபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விவரம் இடம்: அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மேல்மலையனூர், விழுப்புரம் மாவட்டம்
0 Comments