திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் 46-ஆம் ஆண்டு ஆடி மாத கூழ்வார்த்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 508 பக்தர்கள் பால்குடம் ஏந்தி பவனியாக வந்தனர். மஞ்சள், சிவப்பு மற்றும் காவி நிற புடவை அணிந்த பெண்கள் மற்றும் வேட்டி கட்டிய ஆண்கள் பக்தி பரவசத்துடன் பால்குடங்களை தலையில் ஏந்தி வந்த காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.
ஊர்வலத்தில் முன்னதாக அம்மன் மற்றும் விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வீதிகள் வழியாக கொண்டு வரப்பட்டன.
கோவில் ஆலய லட்சுமணன் சாமிகள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்து வழிபாடு நடத்தினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
விவரம்:
• இடம்: ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், மாம்பட்டு, வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்
• நிகழ்வு: 46-ஆம் ஆண்டு ஆடி கூழ்வார்த்தல் திருவிழா
0 Comments