மாதவரம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் தவறுதலாக விழுந்த 6 பவுன் தங்க தாலி செயினை, பெருநகர கழிவுநீர் அகற்றும் ஊழியர்கள் 4 மணி நேரம் போராடி தேடி கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் தாலி செயின், தவறுதலாக கழிவுநீர் தொட்டியில் விழுந்துவிட்டது. இதனை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருநகர கழிவுநீர் அகற்றும் ஊழியர்கள் திலீப், ராஜேஷ், சுசிகரன், அருண், சுரேந்தர், சாமுவேல் ஆகியோர் தொடர்ந்து 4 மணி நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இறுதியில் கழிவுகளுக்கு மத்தியில் இருந்த அந்த 6 பவுன் தங்க தாலி செயினை கண்டுபிடித்து, பெண்ணிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
நகையை திரும்பப் பெற்ற பெண்ணும், பொதுமக்களும் ஊழியர்களின் நேர்மைக்கும், உழைப்புக்கும் நன்றி தெரிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
"கடமையை செய்தோம்" என அமைதியாக சென்ற ஊழியர்களின் செயல் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
0 Comments