திருவண்ணாமலை மாநகராட்சி பொதுமக்கள் உதவி மையம் தொடக்கம் - புகார்களுக்கு புதிய ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகராட்சி பகுதி பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் புதிய "பொதுமக்கள் உதவி மையம்" தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஹெல்ப்லைன் எண்ணை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
என்னென்ன புகார்கள் தெரிவிக்கலாம்?
திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, பொதுமக்கள் பின்வரும் பிரச்சனைகளுக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்:
- குடிநீர் வழங்கல் தொடர்பான புகார்கள்
- கழிவுநீர் அகற்றும் பணிகள்
- பொது சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள்
- மின் விளக்குகள் பழுது சரிபார்தல்
- இதர மாநகராட்சி சார்ந்த புகார்கள்
தொடர்பு எண்
புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க +91 74488 32392 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த உதவி மையம் மூலம் பொதுமக்களின் பிரச்சனைகள் விரைவாக தீர்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source: திருவண்ணாமலை மாநகராட்சி

0 Comments