தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது 5G சேவை தொடர்பாக பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
5G டேட்டாவை *Mobile Hotspot* மூலம் பிற மொபைல்கள், லேப்டாப் போன்ற சாதனங்களுக்கு *Share செய்து பயன்படுத்த முடியாது* என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பலர் தங்களது மொபைல் டேட்டாவை Hotspot மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இனி ஏர்டெல் 5G பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்காது என கூறப்படுகிறது.
*Airtel 5G Plus விதிமுறை என்ன?*
அதேபோல் *Airtel 5G plus* சேவை கிடைக்கும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வரம்பற்ற 5G சேவையை பயன்படுத்த முடியும் எனவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
5G Plus இல்லாத இடங்களில் இணையம் 4G வேகத்திலேயே செயல்படும்.
இந்த புதிய விதிமுறையால் Hotspot-ஐ அதிகம் பயன்படுத்துவோர் மற்றும் ஒரே டேட்டாவை பல சாதனங்களில் பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments