சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் மழைநீர் தேக்கம் - பொதுமக்கள் அவதி


 

சென்னை: இராயபுரம் இரயில் நிலையம் நேற்றிரவு சென்னையில் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் ராயபுரம் ரயில் நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால், பணிக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்லும் காட்சிகள் காணப்படுகின்றன.

படத்தில் காண்பது போல் ஆட்டோக்கள் கூட தண்ணீரில் மெதுவாக செல்கின்றன. பெண்கள், முதியவர்கள் தண்ணீரில் நனைந்தபடி செல்வதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*இடம்*: சென்னை இராயபுரம் ரயில் நிலையம்

*தேதி*: 25.07.2026

Post a Comment

0 Comments