தென்னிந்தியாவின் இசைக் குயில் எஸ். ஜானகி அம்மா காலமானார்


தென்னிந்தியாவின் இசைக் குயில் எஸ். ஜானகி அம்மா காலமானார்.

புகழ்பெற்ற பின்னணிப் பாடகியும், தென்னிந்தியாவின் இசைக் குயில் எனப் போற்றப்பட்ட S. Janaki அம்மா இன்று காலமானார். அவருக்கு வயது 88.

வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள ஜானகி அம்மாள், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய திரையிசையில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார். அவரது இனிமையான குரல் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

ஜானகி அம்மாளின் மறைவு செய்தி இசை உலகினரையும், திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களின் மனதில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும் அந்த மெல்லிசைக் குரல் இன்று மௌனமானாலும், ஜானகி அம்மாளின் பாடல்கள் என்றும் அழியாத நினைவாக வாழும்.

— World News 512

Post a Comment

0 Comments