திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து முனுக்கப்பட்டு சென்ற அரசு பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானது.
*நடந்தது என்ன?*
ஆரணி - முனுக்கப்பட்டு வழித்தடத்தில் சென்ற அரசு பேருந்து, மேல்சீசமங்கலம் மதுரா தீபா நகர் பகுதியில் சென்றபோது, எதிரே திடீரென இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் மோதாமல் தவிர்ப்பதற்காக பேருந்து ஓட்டுநர் சாதுர்யமாக பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.
*அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்:*
நள்ளிரவு நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. மேலும் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. *இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை*
*போலீஸ் விசாரணை:*
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரணி போலீசார், பொதுமக்கள் உதவியுடன் பேருந்தை பள்ளத்தில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தின் பதிவு எண்: TN 25 N0356
World News 512
செய்தியாளர் E.கோபி

0 Comments