இந்தியாவில் முதன்முறையாக *பாலிமர் (Plastic) ரூபாய் நோட்டுகளை* அறிமுகப்படுத்தும் திட்டத்தை ரிசர்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளது.
காகித நோட்டுகளுக்கு மாற்றாக நீடித்து உழைக்கும் மற்றும் பாதுகாப்பான பாலிமர் நோட்டுகளை கொண்டுவர RBI திட்டமிட்டுள்ளது. இது இந்திய நாணய வரலாற்றில் முதல் பெரிய மாற்றமாக அமையும் என எதிர்பார்கப்படுகிறது.
*RBI-ன் புதிய திட்டம் என்ன?*
- பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பாலிமர் தாள்களை வழங்க சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களிடம் *ஆகஸ்ட் 18-க்குள்* விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
- தற்போது பரிசோதனை அடிப்படையில் ₹10, ₹20 நோட்டுகள் பாலிமரில் அச்சிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
*பாலிமர் நோட்டுகளின் சிறப்பு அம்சங்கள்:*
1. *அதிக நீடித்த தன்மை* - சாதாரண காகித நோட்டுகளை விட 4 மடங்கு அதிக நாட்கள் உழைக்கும்
0 Comments