ஆரணி அருகே அசைவ உணவு சாப்பிட்ட 20 பேருக்கு உடல்நலக் குறைவு - 8 சிறுவர்கள் உட்பட மருத்துவமனையில் அனுமதி


 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் உள்ள குல்லா பாய் அசைவ உணவகத்தில் உணவு அருந்தியவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்தஉணவகத்தில் உணவு சாப்பிட்ட 8 சிறுவர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.

உடனடியாக அவர்கள் அனைவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*அதிகாரிகள் விசாரணை:*

இது குறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவில் கலப்படம் இருந்ததா என உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள், "இதுபோன்ற உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments