திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் 5 பக்தர்களின் 16 சவரன் நகை திருட்டு



விழுப்புரம்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக திருவிழாவில் கலந்து கொண்ட 5 பக்தர்களிடம் இருந்து 16 சவரன் நகைகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம் முடிந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், கோவிலுக்கு வந்திருந்த 5 பக்தர்களின் நகைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பக்தர்கள் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததை பயன்படுத்தி நகை திருட்டு நடந்துள்ளதால் பக்தர்கள் அதிர்சி அடைந்துள்ளனர். கோவில் விழாக்களின் போது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments