அரபிக்கடலில் விமானம் விழுந்து விபத்து - பாகிஸ்தான் சரக்கு விமானத்தில் 5 பேர் காணாமல் போனார்கள்



தேதி: 08.07.2026

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தான் கராச்சிக்கு புறப்பட்ட பாகிஸ்தான் பதிவெண் கொண்ட சரக்கு விமானம் ஒன்று அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

K2 Airways சரக்கு விமானம் 5 ஊழியர்களுடன் பயணித்தது. கராச்சிக்கு மேற்கே சுமார் 155 நாட்டிக்கல் மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் தொடர்பை இழந்தது.

இதையடுத்து அந்த சரக்கு விமானம் அரபிக் கடலில் விழுந்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமானத்தில் இருந்த 5 பேரும் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News Reporter 

- ME.GOPI, WORLD NEWS 512, CHENNAI

Post a Comment

0 Comments