பாகிஸ்தான் சென்ற போயிங் 737 சரக்கு விமானம் மாயம் - 5 பணியாளர்களின் நிலை என்ன

*WORLD NEWS 512 | முக்கிய செய்தி*


பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த K2 Airways-க்கு சொந்தமான Boeing 737-400 சரக்கு விமானம் ஒன்று 5 பணியாளர்களுடன் மாயமாகியுள்ளது.

*என்ன நடந்தது?*

1. *விமானம்:* பாகிஸ்தான் பதிவு கொண்ட Boeing 737-400 சரக்கு விமானம். விமான எண்: KTA1732

2. *பயணம்:* ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தான் கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது

3. *நேரம்:* ஜூலை 7, 2026 செவ்வாய்கிழமை இரவு 9:18 மணிக்கு வழிசெலுத்தல் கருவியில் பிரச்சனை என ATC-க்கு தகவல் தெரிவித்தது

4. *மாயமான இடம்:* கராச்சியில் இருந்து 155 nautical miles மேற்கே அரபிக் கடல் பகுதியில் ரேடார் மற்றும் தொடர்பு துண்டிக்கப்பட்டது

5. *கடைசி நிமிடம்:* 1 நிமிடத்தில் 5000 அடி கீழே இறங்கி, பின் 30 வினாடியில் 6000 அடி மேலே சென்று, பிறகு வேகமாக கடலில் விழுந்ததாக Flightradar24 தரவு கூறுகிறது.

*தற்போதைய நிலை:*

பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் உடனே Rescue Coordination Centre-அ Activate செய்து கடல் மற்றும் வான் வழியாக தேடுதல் பணியை தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் கடற்படை கப்பல் PNS Zulfiqar, விமானப்படை விமானங்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை விமானத்தின் இடிபாடுகள் எதுவும் கிடைக்கவில்லை.

*குறிப்பு:* இந்த விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. 5 பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். விசாரணை நடந்து வருகிறது.

 `WORLD NEWS 512`

Post a Comment

0 Comments