சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பெண் டிக்கெட் பரிசோதகர் மற்றும் சட்டக் கல்லூரி மாணவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்திருந்த சட்டக் கல்லூரி மாணவியிடம், பணியில் இருந்த பெண் டிடிஆர்கள் வழக்கமான சோதனையாக பயணச்சீட்டை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு மாணவி, "தான் ரெயிலில் பயணம் செய்யவில்லை. உறவினரை வழியனுப்புவதற்காக மட்டுமே நிலையத்திற்குள் வந்தேன்" என கூறியுள்ளார்.
இதையடுத்து பயணச்சீட்டு இல்லையெனில் *பிளாட்பார்ம் டிக்கெட்* காண்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் மாணவியிடம் பிளாட்பார்ம் டிக்கெட்டும் இல்லை.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த மாணவி பெண் டிடிஆரை *"பளார்"* என அறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

0 Comments