நடிகர் தனுஷ் தனது புதிய நற்பணி மன்றத்திற்கான அதிகாரப்பூர்வ கொடியை வெளியிட்டுள்ளார்


 ரஜினி - தனுஷ் இணைந்து "எண்ணம் போல் வாழ்கை" புதிய கொடி வெளியீடு

சென்னை. நடிகர் தனுஷ் தனது புதிய நற்பணி மன்றத்திற்கான அதிகாரப்பூர்வ கொடியை வெளியிட்டுள்ளார். இந்த வெளியீட்டு நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களை கொண்ட இந்த கொடியின் நடுவில் பெரிய சிவப்பு நட்சத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நட்சத்திரத்தின் உள்ளே மலை மற்றும் சூரிய உதய பின்னணியில் ரஜினிகாந்தின் உருவம் இடம்பெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்துள்ளது.

"எண்ணம் போல் வாழ்கை" மற்றும் "எண்ணம் போல் தான் வாழ்கை" ஆகிய வாசகங்கள் கொடியில் இடம்பெற்றுள்ளன.

ரஜினி மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து கொடியை ஏந்தியபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனுஷ் ரசிகர்கள் இந்த கொடி வெளியீட்டை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த கொடி தனுஷ் ரசிகர்களின் நற்பணி மன்றத்திற்கான அதிகாரப்பூர்வ அடையாளமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments